திரைப்படமாக உருவாகிறது கோவை விஞ்ஞானி ஜி.டி நாயுடு சுயசரிதை - கதை நாயகனாக நடிக்கும் மாதவன்!

திரைப்பட நடிகர் மாதவன் நடிப்பில் கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு-வின் சுயசரிதை திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி திரைப்படம் உருவாக உள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர் கோவையை சேர்ந்த ஜி.டி.நாயுடு. தமிழ் வழியில் 4 ஆம் வகுப்பு வரை படித்த ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் அவர் கண்டுபிடித்த கருவிகள் ஏராளம்.

ஷேவிங் ரேசர், ஜுசர், உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி, கீ வால் கிளாக், ரேடியோகிராம், தமிழ் டயல் ரேடியோ, கட்டட கலவை, எலக்ட்ரிக் மோட்டார், கால்குலேட்டர், பிளேடு, ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின் என ஜி.டி.நாயடு கண்டுபிடித்த கருவிகள் பட்டியல் வெகுநீளம்.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்தில், பல்வேறு கண்டுபிடிப்புகளை பொதுமக்களுக்காக வழங்கிய ஜி.டி.நாயுடு குறித்து இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்ல வேண்டும் எனும் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து படம் தயாரிக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் ஜி.டி.நாயுடு வாக நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி திரைப்படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் பழைய காரை பார்த்தபடி ஜி.டி.நாயுடு நின்றபடி உள்ளது. மேலும், மாதவன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. பல்வேறு கண்டுபிடிப்புகளால் கோவை நகருக்கு பெருமை சேர்த்த ஜி.டி.நாயுடு-வின் பயோபிக் படம் உருவாவதை அறிந்து கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...