உடுமலையில் பெய்த கோடை மழையால் நனைந்த நெற்பயிர்கள் - கொள்முதல் காலத்தை நீடிக்க கோரிக்கை!

உடுமலை பகுதியில் சுமார் 800 ஏக்கரில் 2ஆம் போக நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் திடீர் கோடை மழை பெய்தது. எனவே, கொள்முதல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நனைந்தன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அமராவதி பாசனப்பகுதியில் விவசாயிகள் சுமார் 800 ஏக்கரில் 2ஆம் போக நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் திடீர் கோடை மழை பெய்தது.



இதனால் நெற்பயிர்கள் ஈரமாகின. மேலும், அறுவடைக்காக வயல்களுக்குள் இயந்திரங்களை ஓட்டிச் செல்ல முடியாத அளவுக்கு சகதியாகி உள்ளது. குறிப்பாக, குமரலிங்கம், சாமராயபட்டி, கொழுமம், கண்ணாடிபுத்தூர், நீலம்பூர், பாப்பான்கு ளம், ருத்ராபாளையம், சாளரப்பட்டி, மடத்துக்குளம், நீலம்பூர் உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் ஈரமானதால் அறுவடைக்கு காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தற்போது பெய்த கோடை மழையால் நெற்பயிர்கள் சாயும் அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

அதேநேரம், பயிர்கள் நனைந்து நிலம் சகதியாக மாறியுள்ளது. உள்ளே சென்று ஆறு வடை செய்ய 15 நாட்கள் ஆகிவிடும்.

அதன்பிறகு காயவைத்த பிறகே கொள்முதல் மையத்துக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, நெல் கொள்முதலை முடித்து விடாமல், கால நீட்டிப்பு செய்ய வேண்டும்" என்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...