கிணத்துக்கடவு அருகே பாறைகற்களை ஏற்றிவந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பாறைக்கற்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது. கல்குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகளுக்கும் ரூ.96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு பாறைக்கற்களை ஏற்றிச் சென்ற 2 லாரிகள் சிறைபிடித்து, அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாக பாறைகற்களை ஏற்றி, கேரளா மாநிலத்திற்கு லாரிகள் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

இதுகுறித்து, கனிமவளத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள 10 நெம்பர். முத்தூர், வன்னி குமாரசாமி கோவில் அருகில் அதிகபாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிறைபிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், அளவுக்கு அதிகமாக பாறை கற்களை ஏற்றி சென்ற 2 லாரிகளுக்கும் 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்களும், விவசாயிகளும் சிறைபிடித்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...