கோவையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்தவர்கள் வெகு விமரிசையாக கொண்டாட்டம்!

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியுடன் ஈஸ்டர் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய தவக்காலம் 40 நாட்கள் அனுசரிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து புனித வெள்ளி அன்று மரித்து மூன்றாவது நாளான ஞாயிறு அன்று உயிர்த்தெழும் நிகழ்வே ஈஸ்டர் என அழைக்கப்படுகிறது.

இயேசு உயிர்ப்பு விழாவை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.



இதனையொட்டி கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு நடுஇரவு திருப்பலி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில், ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் போது இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.



அதன் பின் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...