வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநில சிறுவன் காயம் - பரபரப்பு!

கோவை வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதில் கையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். சங்கிலி ரோடு எஸ்டேட் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வட மாநில தொழிலாளியான பாப்பையா என்பவரது மகன் ஆகாஷ்(5) இன்று காலையில் வீட்டின் முன்பு தேயிலை தோட்டம் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் சிறுத்தையை விரட்டி விட்டு சிறுவனை காப்பாற்றினார்.



இதனையடுத்து, சிறுவனை எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...