கோவை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து - அரசு பள்ளி தலைமை ஆசிரியை பலி!

கோவை பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சத்தியவேணி(55) கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சென்ற போது அவரது பைக் மீது வேன் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வஞ்சிமாநகரை சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி சத்தியவேணி(55). இவர் பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக நரசிம்மநாயக்கன்பாளையத்திற்கு சென்றுவிட்டு, ஸ்கூட்டரில் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.



அப்போது, தெற்குபாளையம் பிரிவு அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த டீ கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவில் விபத்து குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதில் சத்தியவேணி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த வேன் அவர் மீது மோதியதில், தூக்கிவீசப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய வேன், தலைமை ஆசிரியை மீது மோதுவதற்கு முன்பு அவருக்கு முன்னால் இருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீதும் மோதியுள்ளது. அதில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...