உடுமலை - மூணாறு சாலையில் மிரட்டும் ஒற்றை யானையால் பரபரப்பு

உடுமலை - மூணாறு சாலையில் உள்ள புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை ஆண் யானை, வாகனங்களை மறித்து தாக்குவதால், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை - மூணாறு சாலையில் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு, மறையூர் பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

பருவ மழை குறைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அமராவதி அணையை நோக்கி, யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் படையெடுத்த வண்ணம் உள்ளது.



இந்நிலையில், ஏழுமலையான் கோவில் முதல் புங்கன் ஓடை பாலம் வரையிலான பகுதியில், ஒரு ஆண் யானை மட்டும் முகாமிட்டுள்ளது.

இவ்வழியே வரும் பேருந்து, லாரி, சுற்றுலா வாகனங்களை மறித்தும், கண்ணாடிகளை உடைத்தும், அச்சுறுத்தி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை யானை வாகனங்களை வழி மறித்து தாக்குகின்றன. யானை கூட்டத்திலிருந்து விலகி வந்து, மிகவும் கோபமான மன நிலையில் சாலை பகுதியில் முகாமிட்டுள்ளது.

எனவே, இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...