எங்கள் சமூகம் மீது அவதூறு பரப்புகிறார்..! - நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா மீது பண்டார குல நல சங்கம் புகார்!

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா பண்டார குல சமுதாயத்தினர் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பண்டார குல நல சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பண்டார குல நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பண்டார சமுதாயத்தை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆ.ராசாவின் இந்த பேச்சு, யூடியூப் தளத்தில் வெளியாகி, எங்களது சமுதாய மக்கள் பிற சமுதாய மக்களிடம் மிகவும் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தில் எடுத்துள்ள உறுதி மொழியின் படி இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார்.



எனவே நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அதேபோல் யூ டியூபில் தங்கள் சமுதாயம் பற்றி பதிவிடப்பட்ட வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...