கோவை சிறுமுகையில் பிடிப்பட்ட அரிய வகை நாகப்பாம்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை சேர்ந்த ராஜ்குமார்(48) என்பவர் வீட்டின் உள்ள குடிநீர் தொட்டியில் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள அரியவகை நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.


கோவை: சிறுமுகையில் குடிநீர் தொட்டியில் பதுங்கியிருந்த அரியவகை நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(48). விவசாயியான இவரது வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டியில் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது.

இது குறித்து பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான காஜாமைதீனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து குடிநீர் தொட்டியிலிருந்த 5 அடி நீளமுள்ள அரிய வகை நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

பின்னர் அந்தப் பாம்பினை சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி, வனப்பகுதியில் விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பாம்பு பிடி வீரரால் பிடிபட்ட நாகம், அரியவகை பொறி நாகம். இது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டது, என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...