கோவையில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபர் கைது!

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், குடிபோதைக்கு அடிமையான இவர், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் தனலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தட்டிக்கேட்ட சகோதரியையும் தாக்கியுள்ளார். இவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தம்பதி நடராஜ்-தனலட்சுமி (60). இவர்களது இளைய மகன் மணிகண்டன் (34). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினந்தோறும் குடித்துவிட்டு, தாய் தனலட்சுமியை மிரட்டி பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன், தாய் தனலட்சுமியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற அவரது அக்காவையும் குடிபோதையில் தாக்கியுள்ளார். இதை அடுத்து தனலட்சுமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மணிகண்டன் மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...