மேட்டுப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மண் பரிசோதனை!

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு 39 ஆண்டுகள் கடந்துவிட்டதால், அதை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அதிகாரிகள் மண் பரிசோதனை மேற்கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் அமைக்க அதிகாரிகள் மண் பரிசோதனை செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் கடந்த 1984ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன.

அதேபோல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்து நிலையத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளும் இயங்கி வருகின்றன. நாள்தோறும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட பணிக்காகவும், வேலைக்கு செல்வோரும், மாணவ,மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் வந்தடைந்த, பின்னர் மலைகளின் அரசி ஊட்டிக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 39 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல் அடைந்தும், சிதிலமடைந்தும்,மேல் பூச்சுகள் இல்லாமல் பொலிவு இழந்தும் காணப்படுகிறது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து தமிழக அரசு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தைப் புனரமைக்க உத்தரவிட்டது.

முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று திருப்பூர், கோவை பேருந்துகள் நிற்கும் இடங்களில் மண் பரிசோதனை ஆலோசகர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் கூறுகையில், பேருந்து நிலையத்தை புனரமைக்கும் வகையில், முதற்கட்டமாக மண் பரிசோதனை ஆலோசகர்களால், மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையினை ஆய்வு செய்த பின்னர் பணி தொடங்கும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...