கோவை அருகே ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடிக்கு வீரவணக்கம்!

கோவை அருகே நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், வெலிங்டனில் உள்ள 25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.



கோவை: நாட்டுக்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1993ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சம்பாரி என்ற இடத்தில் உள்ள பனிப்பிரதேச மலைப்பகுதியில் 8 தீவிரவாதிகள் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற போது, அவர்களை எதிர்த்து நின்று போரிட்டு 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரமரணம் அடைந்தார்.



தனி மனிதனாக இருந்து தீவிரவாதிகளை தாக்கி கொன்று வீரமரணம் அடைந்ததை போற்றும் விதமாக, இந்திய அரசு 1996ஆம் ஆண்டு இவருக்கு ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா வழங்கி கவுரவித்தார்.



கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில், ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.



இந்நிலையில் அவரது நினைவிடத்தில் நடந்த 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ பிரிவின் சுபேதார் மேஜர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான 25 ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய வீரவணக்கம் செலுத்தி பின்னர் கென்னடியின் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...