ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துக..! - கோவையில் DYFI போராட்டம்!

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த கோரியும், சி.ஆர்.பி.எப் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஒன்றிய அரசின் போட்டித்தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடத்திட வலியுறுத்தி கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே நடத்திட கோரியும், CRPF தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிப்பதாக கூறி, ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சுனன் கூறுகையில், கடந்த பல வருடங்களாக CRPF தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஒன்றிய அரசு போட்டி தேர்வுகள் அனைத்தையும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும், என்றார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...