குறைதீர்ப்புக் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள் - கோவை மாநகராட்சி மேயர் அதிரடி உத்தரவு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவிடம், பொதுமக்கள் 86 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவிடம், பொதுமக்கள் 86 பேர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதாக்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்கள்‌ மரு.மோ.ஷாமிளா, க.சிவகுமார்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



இந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில்‌ மேயரிடம், மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ 86 கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. அதில்‌, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநா வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்திருந்தனர்.

இவற்றில்,‌ கிழக்கு மண்டலத்தில்‌ 19 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 10 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 14 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 13 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 21 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 9 மனுக்களும்‌ எனமொத்தம்‌ 86 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

அவற்றைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார்,‌ மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ அண்ணாதுரை, எஸ்‌.கணேஷ்குமார்‌(பொ), முத்துராமலிங்கம்‌, மோகனசுந்தரி, சேகர்‌, உதவி ஆணையா்‌(வருவாய்‌) செந்தில்குமார்‌ இரத்தினம்‌, நகரமைப்பு அலுவலா்‌ கருப்பாத்தாள்‌, உதவி செயற்பொறியாளார்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலாகள்‌, உதவி பொறியாளார்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலா்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...