சமூக வலைத்தளத்தில் அவதூறு, வன்முறையை தூண்டும் வகையில் பதிவு - கோவையில் பாஜக நிர்வாகி கைது!

மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த பாஜக தொழில் பிரிவு மாநில துணை தலைவர் செல்வகுமாரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சமூகவலைதளங்களில் அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்த பாஜக தொழில் பிரிவு மாநில துணை தலைவர் செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரில் சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிடும் நபர்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தொழில்துறை பிரிவு துணை தலைவர் செல்வகுமார், மின்சாரத்துறை அமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக தொழில் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 2022ஆண்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்று வெளியே இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் மற்றும் பதில் பதிவுகள் (Retweet) ஆகியவை பல்வேறு பிரச்சனைகளை தூண்டும் வகையில் உள்ளது

இதுதொடர்பாக போலீசாருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த காரணத்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளது. மேலும் செல்வகுமார் மீது கரூர் மாவட்டத்தில் மோசடி வழக்கு ஒன்று உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...