குவாலிட்டி மேனேஜர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் காலியாகவுள்ள குவாலிட்டி மேனேஜர் (Quality Manager)பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்.21ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் காலியாக உள்ள குவாலிட்டி மேனேஜ்ர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை, சிங்காநல்லூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ESI (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி) மருத்துவமனையில் குவாலிட்டி (Quality Manager) பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில். தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறுத்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பணி குறித்தான விரிவான விபரங்களை கோவை மாவட்ட Coimbatore.nic.in இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 21.04.2023 அன்று மாலை 5 மணிக்குள், முதல்வர்,அரசு மருத்துவகல்லூரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோயமுத்தூர்-641015 அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

மேற்படி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 24.04.2023- ம் தேதி 10 மணிக்கு கோவை, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...