தலைமை செயலக வாசல் முன்பு சீருடையில் தலைமை காவலர் தனது மகளுடன் திடீர் சாலை மறியல்!

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தனது மகளின் வலது கால் பாதிக்கப்பட்ட நிலையில், தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை செயலகம் வாயில் முன்பு தலைமை காவலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



சென்னை: சென்னை தலைமைச் செயலகம் வாசலில் சீருடையில் இருந்த தலைமை காவலர் தனது மகளோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவருக்கு பிரதீக்‌ஷா என்ற 10 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில், பிரதீக்‌ஷா தனது 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology)காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்‌ஷாவின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதீக்‌ஷாவுக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதத்திற்கு ரத்தம் செல்லாமல் கருப்பு நிறமாக மாறியதுடன் உடலில் உள்ள ரத்தம் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது.

மேலும் தங்கள் அனுமதியின்றி ரத்த சுத்திகரிப்பு (Dialysis)செய்யப்பட்டதன் விளைவால் வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.



எனவே இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி கோதண்டபாணி பாதிக்கப்பட்ட தனது மகளுடன் தலைமை செயலக வாயில் முன்பு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



தலைமை காவலரின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக தலைமை செயலகம் வெளியே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...