தலைமை செயலக வாசல் முன்பு சீருடையில் தலைமை காவலர் தனது மகளுடன் திடீர் சாலை மறியல்!

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தனது மகளின் வலது கால் பாதிக்கப்பட்ட நிலையில், தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை செயலகம் வாயில் முன்பு தலைமை காவலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



சென்னை: சென்னை தலைமைச் செயலகம் வாசலில் சீருடையில் இருந்த தலைமை காவலர் தனது மகளோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவருக்கு பிரதீக்‌ஷா என்ற 10 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில், பிரதீக்‌ஷா தனது 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology)காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்‌ஷாவின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதீக்‌ஷாவுக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதத்திற்கு ரத்தம் செல்லாமல் கருப்பு நிறமாக மாறியதுடன் உடலில் உள்ள ரத்தம் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது.

மேலும் தங்கள் அனுமதியின்றி ரத்த சுத்திகரிப்பு (Dialysis)செய்யப்பட்டதன் விளைவால் வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.



எனவே இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி கோதண்டபாணி பாதிக்கப்பட்ட தனது மகளுடன் தலைமை செயலக வாயில் முன்பு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



தலைமை காவலரின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக தலைமை செயலகம் வெளியே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...