தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் ரூ.29 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை!

தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்க சுமார் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த பூமிபூஜையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் 2022 மற்றும் 23 நிதியாண்டிற்கான 15வது நிதி குழு மாநிலத்தில் 29 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டது.

அதில் உடுமலை சாலை ஏழாவது வார்டு பகுதியில் குறிஞ்சி நகர் மற்றும் சலவையாளர் காலனிக்கு சிமெண்ட் சாலை அமைக்க பதினைந்து லட்சமும் அலங்கியம் சாலையில் உள்ள மெட்ரோ சிட்டியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, அந்த பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் பைப் லைன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் மெட்ரோ சிட்டி மற்றும் மலையம்மன் நகர் ஆகிய 2 நகர்களுக்கு 14 லட்சம் உள்ளிட்ட மொத்தம் 29 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ரமேஷ் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், ஊராட்சி துணை தலைவர் நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர் சரஸ்வதி தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் பெரியசாமி ஏற்பாடு செய்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...