விஷூ பண்டிகை கொண்டாட்டம் - கோவை சித்தாபுதூர் ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை

மலையாள வருட பிறப்பான விஷு தினத்தை முன்னிட்டு கோவையில் புகழ்பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மூலவர் ஐயப்ப சாமிக்கு கொன்றை பூக்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. ஆலயத்திற்கு வந்த மக்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.


கோவை: சித்தாபுதூர் ஐயப்பன் ஆலயத்தில் மலையாள வருட பிறப்பான விஷு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கேரளாவில் உள்ள மக்கள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது போல், மலையாள புத்தாண்டை பட்டாசுகள் வெடித்தும், வானவேடிக்கைகள் வைத்தும் சிறப்பாக வரவேற்பது வழக்கம்.

மேலும் வீடுகளில் முன்தினம் இரவே பழங்கள், பூக்களால் தங்களது பூஜை அறையை அலங்கரித்து காய்கறிகள், நவதானியங்கள், மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் வைத்து தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

அதிகாலையில் வீட்டில் உள்ள குழந்தைகளின் கண்களை கட்டியப்படி அழைத்து வந்து அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையை முதலில் பார்த்து எழுவதுபோல் தரிசனம் மேற்கொள்ள வைத்து புதிய வருடத்தில் வாழ்க்கை இனிமையாக அமையப் பழங்களையும், வாழ்வில் அனைத்து செல்வங்களும் நிறைய வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு வைத்து பணம் வைத்து விஷு கை நீட்டம் கொடுப்பதை பாரம்பரியமாக செய்து வருகிறார்கள்.

இதையே கோவையில் வாழும் மலையாள மொழி பேசும் மக்களும் பாரம்பரியம் மாறாமல் மலையாள வருடப்பிறப்பை உற்சாகமாக வரவேற்பர்.



இந்த பண்டிகையையொட்டி, கோவையில் புகழ்பெற்ற சித்தாபுதூர் ஆலயம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



மூலவர் ஐயப்ப சாமிக்கு கொன்றை பூக்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.



மேலும் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் பூசாரிகள் சாமி சிலைகள் முன்பு வைத்துப் பூஜிக்கப்பட்ட நாணயங்களை வழங்கினார்கள்.



பக்தர்களும் தங்களது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...