பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் வாலிபர் தற்கொலை - கிரிக்கெட் சூதாட்டம் காரணமா?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரபல தனியார் விடுதியில் சபாநாயகம் எனும் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் வரை பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை: பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம் (35). இவர் நேற்று அதிகாலை 2.10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இன்று அறையை அவர் காலி செய்ய வேண்டியிருந்ததால், விடுதி ஊழியர்கள் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது,சுவிட்ச் ஆப் ஆகி இருந்துள்ளது. உடனே அறையின் மாற்றுச் சாவியை கொண்டு, ஊழியர்கள் திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது பாத்ரூம் அருகே இறந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் தகவல் கூறியதை தொடர்ந்து,அவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு இறந்து ஐந்து மணி நேரம் ஆகிறது என்று கூறியுள்ளனர்.



பின்னர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் வரை பணத்தை இழந்ததால், மனவேதனையில் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...