கோவை வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி சார்பில் திருவிளக்கு பூஜை!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள வீரபாண்டி மாரியம்மன் கோவில் திடலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற 1508 விளக்குகள் கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.



கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற மாபெரும் திருவிளக்கு பூஜையை அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள வீரபாண்டி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள திடலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், 2ம் ஆண்டு 1508 விளக்குகள் கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த பூஜையில், முதலாவதாக சிலம்பாட்ட நிகழ்ச்சி, ஒயிலாட்டம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அதனைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.



இதனை ஸ்ரீ வாராஹி மந்திராலயத்தை சேர்ந்த மணிகண்ட சுவாமிகள் மற்றும் சிவ நாசர் பூஜையை நடத்தி வைத்தனர். இந்த பூஜையில் கலந்துக்கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விளக்கு, பூக்கள், எண்ணைய், மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சிப்பு, வெற்றிலை மற்றும் பாக்குகளை விழா குழுவினர் மூலம் வழங்கப்பட்டது.



இதனையடுத்து 1,508 பெண்கள் மற்றும் குழந்தைகள் விநாயகருக்கு பூஜை செய்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன. இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்த விழாவில் வீரபாண்டி, கூடலூர் கவுண்டம் பாளையம், நாயக்கனூர், சாமநாயக்கன் பாளையம், காளி பாளையம், திருமலைநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...