கோவை வடவள்ளி அருகே 8.5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை - 4 பேர் கைது!

வடவள்ளி அருகேயுள்ள அஜ்ஜனூர் பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த தேனியை சேர்ந்த மனோஜ்குமார்(33), மார்க்கண்டன் (33), பிரவீன் (31), தினேஷ் (27) ஆகியோரை கைது செய்த போலீசார், 8.5 கிலோ கஞ்சா மற்றும் 4 சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் இன்று (15.04.2023) வடவள்ளி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார், வடவள்ளி அடுத்த அஜ்ஜனூர் (ஸ்ரீ ராம் கார்டன்) பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் குமார் (33), மார்க்கண்டன் (33), பிரவீன் (31) மற்றும் தினேஷ் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.1.1 லட்சம் மதிப்பிலான சுமார் 8.5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 94981-81212 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும், 77081-00100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...