ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குக - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தாராபுரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தாராபுரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை சளி, காய்ச்சல், உடல் வலி ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ்வாறு உடல் நிலை சரியில்லாத போது இவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் நேற்று முன்தின நிலவரப்படி 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலர் மர்ம காய்ச்சலுக்கு இறந்ததாக மக்களிடையே கருத்து நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் காரணமாக கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே அரசு உடனடியாக கொரோனா பரிசோதனைகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைகளை கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...