உடுமலை தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் விழா அனுசரிப்பு!

உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில், நடைபெற்ற தீ தொண்டு நாள் வார விழாவில், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட தீயணைப்பு துறையினர், தீவிபத்தை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


திருப்பூர்: உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு துறையினர் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.



மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



பின்னர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகை பிடிக்க கூடாது.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீ விபத்தினை தவிர்க்க கூடிய வழிகள் குறித்து பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழா வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...