வால்பாறையில் காலை சிற்றுண்டி கூடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கம்!

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி கூடத்திற்கான பூமி பூஜை மற்றும் கட்டிட பணிகள் வால்பாறை நகராட்சி தலைமை பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது.



கோவை: வால்பாறையில் 36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி கூடத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வலியுறுத்தி வால்பாறையில் மூன்று இடங்களில் காலை சிற்றுண்டி கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வால்பாறை பத்தாவது வார்டுக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 36 லட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி கூடம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு இன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில், வால்பாறை நகராட்சி தலைமை பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில், நகர கழக செயலாளர் குட்டி (எ) சுதாகர், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.சா. செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர் காமாட்சி, கோழிக்கடை கணேசன் ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிகடை கணேசன், மாவட்ட கழக துணை செயளாலர் ஈ.கா.சி பொன்னுச்சாமி,நகரக் கழக நிர்வாகிகள் சரவணபாண்டியன், டென்சிங்,நகர மன்ற உறுப்பினர்கள் JBR. பாஸ்கர், R.ரவிச்சந்திரன், GKM.மகுடீஸ்வரன், மற்றும் பழக்கடை செல்வம், மணிக்குமார் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...