திருமூர்த்தி அணை நீர்மட்டம் தொடர் சரிவு - அணை பகுதியில் ஆடு மேய்க்கும் விவசாயிகள்!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் கோடை வெயில் மற்றும் மழை குறைந்ததன் காரணமாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், அணை பகுதியில் தற்போது வெளியில் தெரியும் புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணை பகுதியில் உள்ள புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட் சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையில் இருந்து நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இது தவிர, உடுமலை நகருக்கும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இந்த அணை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது மூன்றாம் மண்டலத்துக்கு வரும் 20-ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் குறைந்ததால் வெளியில் தெரியும் புல்வெளியில் விவசாயிகள் ஆடு மேய்க்கின்றனர்.



இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் பின்பக்க இடங்களில் மண் மேடாக காட்சி அளிக்கிறது. அதில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் தற்போது 31.56 அடியாக உள்ளது. காண்டூர் கால்வாய் மூலம் 571 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 944 கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடதக்கது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...