உடுமலையில் கடும் வெயில் எதிரொலி..! - இளநீர் விலை ரூ.40 ஆக உயர்வு!

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் இளநீர் விலை ரூ.40 வரை உயர்ந்துள்ளது. ஆனாலும் விற்பனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என வியாபாரிகள் தகவல்.


திருப்பூர்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இளநீர் விலை ரூ,40 க்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, நுங்கு ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதன் காரணமாக இளநீர் விலையும், விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இளநீர் தற்போது, ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.



இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இளநீர் வியாபாரி ஒருவர் கூறியதாவது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரளவு தண்ணீர் உள்ள பகுதியில் மட்டுமே இளநீர் உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற பகுதியில் உற்பத்தி குறைந்துள்ளது.

இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இளநீர் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...