மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சோகம்!

உடுமலை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்த சக்தி குமார் (16) என்ற பிளஸ் 1 மாணவர் தனது நண்பர்கள் 4 பேருடன் ஜோத்தம்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்த போது, மாணவர் சக்தி குமார் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில் தீயணைப்பு துறையினர், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரது உடலை மீட்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன். இவரது மகன் சக்திகுமார் (16). இவர் உடுமலை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அதன்படி அவருடைய வகுப்புத் தோழர்களான மடத்துக்குளத்தை அடுத்த செங்கண்டிபுதூரை சேர்ந்த பிரசன்னா, ஆண்டியக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் உடுமலை கணேஷ் நகரை சேர்ந்த தருண்குமார் ஆகியோருடன் மடத்துக்குளம் அருகே உள்ள ஜோத்தம்பட்டி பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அங்கு செங்கண்டிபுதூரைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் இறங்கி மாணவர்கள் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சக்திகுமார் கிணற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது நண்பர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் சக்திகுமார் கிணற்று நீரில் மூழ்கினார். இதனையடுத்து சம்பவம் குறித்து உடுமலை தீயணைப்பு துறையினர் மற்றும் கணியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி சக்திகுமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் சுமார் 40 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இதனால் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து 3 மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு கிணற்றிலுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சக்திகுமாரின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...