வால்பாறை அருகே காட்டுத் தீ - மரங்கள், செடிகொடிகள் எரிந்து சேதம்

வால்பாறை அருகே அட்டகட்டி வரையாட்டு பாறை பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு உள்ளது. தீ அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில்வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் காடுகளில் தண்ணீர் வறண்டு, மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து,காடுகள் வறட்சியாக காணப்படுகிறது.



வனத்துறையினர் காட்டு தீ ஏற்படாத வண்ணம்பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி பகுதியில் உள்ள வரையாட்டுப்பாறை வனப்பகுதிக்குள் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.



சுமார் 7 மணி அளவில் ஏற்பட்ட இந்தத் தீ நள்ளிரவுவரை வனப்பகுதியில் பரவியதில் அங்கிருந்த புற்கள், மரங்கள் எரிந்து சாம்பலகின. வால்பாறை வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலும் பொள்ளாச்சி வனத்துறையினர் சார்பாகவும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனவர்கள் காட்டிற்குள் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் எவ்வாறு தீ பிடித்தது என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...