மருத்துவக் கழிவுகள் அகற்றும் விவகாரம் - கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கழிவுகளை எடுக்க பெறப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும், மாநகராட்சி நிர்வாகமே கழிவுகளை குறைந்த கட்டணத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரா மெடிக்கல் லேப் எஜுகேஷன் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரா மெடிக்கல் லேப் எஜுகேஷன் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



இதில், மருத்துவ கழிவுகளை குறைந்த கட்டணத்தில் மாநகராட்சி நிர்வாகமே எடுக்க வேண்டும் என்றும், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலைப்பேட்டையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர ஆய்வகங்களுக்கு மருத்துவக் கழிவுகளை எடுக்க தனியார் நிறுவனத்தால் மாதம்தோறும் வசூலிக்கப்படும் 2000 முதல் 2800 வரையிலான கட்டணத்தை 750 ஆக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.



பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, 2 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கோவை வடக்கு மற்றும் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கும் இவர்கள் மனுவாக அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...