கோவை ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் நிபந்தனை மீறல் - நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு

கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் உயர் நீதிமன்ற கூறிய நிபந்தனைகளை மீறியது, பொது இடத்தில் சிலம்பம் சுற்றி ஆயுதப் பயிற்சி எடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 4 பேர் மீது இரண்டு 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Coimbatore: தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தியது. அந்த வகையில் கோவையில் சத்ரபதி வீரசிவாஜியின் 350வது முடி சூட்டிய விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட பேரணியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் துவங்கிய இந்த பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்து ராஜவீதி தேர்முட்டி திடலில் நிறைவடைந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற அளித்த விதிகளை மீறியதாகவும், பொது இடத்தில் சிலம்பம் சுற்றி ஆயுத பயிற்சி எடுத்ததாக கோவை வெரைட்டிஹால் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் விக்னேஷ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பசவலிங்கம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சுகுமார், துணை தலைவர் குமார், செய்தி மக்கள் தொடர்பு நிர்வாகி விஜயகுமார், கோவை மாநக செயலாளர் முருகன் உள்ளிட்டோர் மீது 151, 341, 290 மற்றும் 153 (aa)ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...