கோவை ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் நிபந்தனை மீறல் - நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு

கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் உயர் நீதிமன்ற கூறிய நிபந்தனைகளை மீறியது, பொது இடத்தில் சிலம்பம் சுற்றி ஆயுதப் பயிற்சி எடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 4 பேர் மீது இரண்டு 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Coimbatore: தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தியது. அந்த வகையில் கோவையில் சத்ரபதி வீரசிவாஜியின் 350வது முடி சூட்டிய விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட பேரணியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் துவங்கிய இந்த பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்து ராஜவீதி தேர்முட்டி திடலில் நிறைவடைந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற அளித்த விதிகளை மீறியதாகவும், பொது இடத்தில் சிலம்பம் சுற்றி ஆயுத பயிற்சி எடுத்ததாக கோவை வெரைட்டிஹால் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் விக்னேஷ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பசவலிங்கம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சுகுமார், துணை தலைவர் குமார், செய்தி மக்கள் தொடர்பு நிர்வாகி விஜயகுமார், கோவை மாநக செயலாளர் முருகன் உள்ளிட்டோர் மீது 151, 341, 290 மற்றும் 153 (aa)ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...