மே.3-க்கு பின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சிஐடியு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் முடிவு!

திருப்பூரில் சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் மே.3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான நோட்டீஸ்கள் நாளை முதல் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



திருப்பூர்: மே 3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.



திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க மாநில சம்மேளன குழு கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் பல்வேறு சிறப்புகளை உடையதாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

குறிப்பாக தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு ஒரு விதமாகவும் நடந்து கொள்வது ஒரு விதமாகவும் இருக்கிறது. இவை எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் தனியார்மயம் கொண்டு வரப்பட மாட்டாது என அறிவித்திருக்கக்கூடிய நிலையில், தற்போது அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க இருக்கும் முடிவு கடும் கண்டனத்துக்குரியது.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள பண பலன்களை விடுவித்து ஊழியர்களுக்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மூன்றாம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நோட்டீஸ் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.

15 நாட்களுக்குள் தொழிலாளர் துறையும் தமிழக அரசும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு காணப்பட வேண்டும். போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் போக்கையே திமுக அரசு பின்பற்றுவதாக சந்தேகம் ஏற்படுகிறது. எங்கள் கோரிக்கைகள் நியாயமானது என்பதால் மற்ற தொழிற்சங்கத்தினரும் இதற்கு முழு ஆதரவு அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...