கோவை அருகே கத்தியால் குத்தி இளைஞர் கொலை - போலீசார் தீவிர விசாரணை

கோவை குனியமுத்தூரை சேர்ந்த ரகுமத்துல்லா எனும் இளைஞர், நண்பருடன் செல்வபுரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், ரகுமத்துல்லாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுமத்துல்லா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை குனியமுத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவா் ரகுமத்துல்லா (வயது 25).

இவர் தனது நண்பர் ஒருவருடன், செல்வபுரம் தில்லை நகருக்கு சென்றார். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் அங்கு வந்த சிலர் திடீரென ரகுமத்துல்லாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.



இதில், படுகாயமடைந்த ரகுமத்துல்லா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அவரைமீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ரகுமத்துல்லா உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடம் டாஸ்மாக் மதுக்கடை அருகே என்பது தெரியவந்தது. இதனால் மது போதையில் யாராவது கத்தியால் குத்திக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் முன்பகை காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...