திருப்பூர் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்யும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழகத்தில் சமீப காலமாக வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு சில வழக்கறிஞர்கள் கூலிபடைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.



எனவே, தமிழக வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய , தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...