கோவையில் பாஜக அலுவலக ஊழியர் மீது தாக்குதல் - 9 பேர் கைது

கோவை பனைமரத்தூரை சேர்ந்த தென்னரசு, பாஜக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பனைமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பது குறித்து போலீசாருக்கு தென்னரசு தகவல் அளித்ததாக கருதி, அவரை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்ததாக ஒருவரை தாக்கிய 9பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பனைமரத்தூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் தென்னரசு (48). இவர் கோவை பாஜக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இது குறித்து தென்னரசு போலீசாரிடம் கூறியதாக எண்ணி, அப்பகுதி இளைஞர்கள் தென்னரசுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தாக்கியதோடு, அவரின் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து அவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பனைமரத்தூரை சேர்ந்த அரவிந்த் (21), சதீஸ்குமார் (20), விஜயகுமார் (19), பத்மா (53), அம்பிகா (45), ரோகினி (41), நந்தினி (42) உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் புகார் அளித்துள்ள தென்னரசு மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...