பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.



இந்த கூட்டத்தில் பொள்ளாச்சியின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை சார் ஆட்சியர் பிரியாங்காவிடம் தெரிவித்தனர்.



பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள பத்து கிராமங்களில் இருக்கும் மொத்த கழிவு நீரும் அருகில் இருக்கும் பல ஏக்கர் விளை நிலத்தில் தேங்கி நிற்பதால் கிணற்று நீர் மாசடைவதாகவும், கால்நடைகள் நோய்வாய்படுவதாகவும், அங்கு உள்ள தென்னை மரங்கள் பட்டுபோவதாகவும், அருகில் உள்ள கிராம மக்கள் வியாதிகளுக்கு உள்ளாவதாகவும் கூறி சார் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென கூட்ட அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு முறை விவசாய குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனவும் மழை காலம் துவங்கினால் மீண்டும் விளை நிலத்தில் கழிவு நீர் புகுந்து சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் உடனே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இதை விசாரித்த சார் ஆட்சியர் பிரியங்கா போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...