கோவை அரசு கல்லூரியில் பொதுநிர்வாக மன்ற விழா - மாநகராட்சி ஆணையாளர் மாணவர்களுக்கு ஆலோசனை

கோவை அரசு கலைக்கல்லூரி பொது நிர்வாகத்துறை மன்ற விழாவில் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கலந்து கொண்டு UPSC உள்ளிட்ட அரசுத்‌ தோ்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்‌, மாணவர்களை ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌ UPSC தேர்வில்‌ எப்படி எளிதாக தோர்ச்சி பெறுவது என்பது குறித்தும்‌ ஆலோசனைகளை வழங்கினார்‌.


கோவை: அரசு தேர்வில் எளிதாக தேர்ச்சிப் பெறுவது குறித்து மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆலோசனை வழங்கினார்.

கோயம்புத்தூர்‌ அரசு கலைக்கல்லூரியில், பொது நிர்வாகத்துறை மன்ற விழா 2022-23 கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கலந்து கொண்டு மன்ற விழாவினை தொடங்கி வைத்தார்‌.

அப்போது அவர் பேசியதாவது, கோயம்புத்தூர்‌ அரசு கலைக்கல்லூரி பொது நிர்வாகத்துறை சார்பில்‌ நடத்தப்படுகின்ற, இந்த மன்ற விழாவில்‌ பங்கேற்பதில்‌ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்‌.



மாணவர்கள்‌ ஆர்வமுடனும்‌, அக்கறையுடனும்‌ UPSC உள்ளிட்ட அரசுத்‌ தோ்வுகளுக்கு படிக்க வேண்டும்‌. எனவே பொது நிர்வாகத்துறையில்‌ படிக்கும்‌ மாணவர்கள்‌ பல்வேறு அரசு போட்டித்தோவுகளை எழுத முன்வர வேண்டும்‌. என்ன படிக்கலாம்‌ என்பது குறித்து உயர்வான எண்ணங்களை IAS, IPS, IRS, போன்ற உயர்‌ பதவிகளுக்கு வர வேண்டும்‌ என எண்ணி படிக்க வேண்டும்‌.

அப்படி எண்ணி படித்தால்‌ மட்டுமே உயர்‌ பதவியை எட்ட முடியும்‌. மாணவர்கள்‌ படிக்கும்போது தினசரி நாளிதழ்களை படிக்கும்‌ எண்ணத்தை வளர்க்க வேண்டும்‌. அன்றாட வாழ்வில்‌ நாளிதழ்கள்‌ வாசிப்பது மிகவும்‌ முக்கியமானதாகும்‌.

மேலும்‌, போட்டித்தேர்வுகளுக்கான பல்வேறு நூல்களை படிப்பதற்கு திட்டமிட்டு, காலத்தை ஒதுக்கி அக்கறையுடனும்‌, ஆர்வத்துடனும்‌ படிக்க வேண்டும்‌. இன்றைய அறிவியல்‌ வளர்ச்சியில்‌ பல்வேறு தனியார்‌ பயிற்சி மையங்களுக்கு சென்று தான்‌ படிக்க வேண்டும்‌ என்ற அவசியம்‌ இல்லை. அறிவியல்‌ தொழில்நுட்ப வளர்ச்சியை பெற்றுள்ளது.

WhatsApp, Websites, YOUTUBE, GOOGLE போன்ற வழிகளில்‌ போட்டித்‌ தேர்வுகளுக்கு படிக்க தேவையான நால்கள்‌ கிடைக்கின்றன. எனவே மாணவர்கள்‌ தங்கள்‌ வாழ்வினை மேம்படுத்திக்‌ கொள்ள உயர்‌ பதவிகளுக்கு வர வேண்டும்‌ என உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்‌ என்றார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...