கோவையில் சிறுதுளி அமைப்பின் சார்பில் பூமித்தாயின் நலன் காக்க சிறப்பு முகாம் - பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

கோவையில் சிறுதுளி என்ற தனியார் அமைப்பின் சார்பில் இயற்கையின் ஆழத்தில் என்ற தலைப்பில் நடைபெற்ற Nurture Nature Camp 2023 என்ற 5 நாள் சிறப்பு முகாமில் கோவையில் உள்ள 18 பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் சிறுதுளி அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பல்வேறு பள்ளிகளை ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



சிறுதுளி என்ற தனியார் தொண்டு அமைப்பானது, தனது 15 வது பதிப்பாக பூமித்தாயின் நலன் காக்க இயற்கையின் ஆழத்தில் என்ற தலைப்பில் Nurture Nature Camp 2023 என்ற முகாம் நடைபெற்று வருகிறது.



இந்த ஐந்து நாள் முகாமில் 18 பள்ளிகளை சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த முகாமானது, கடந்த 18 ஏப்ரல் 2023 அன்று VOC பூங்காவில் நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களால் நடப்பட்ட பச்சை நாயகி மரத்திற்கு அருகில் நடைபெற்ற தொடக்க விழாவில் வாழ்த்து பாடல் மற்றும் வருண காயத்ரி மந்திரத்துடன் முகாம் தொடங்கியது.

இந்த முகாமில், சிறுதுளியின் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர், சுஜானி பாலு வரவேற்புரை வழங்கினார்.



சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் வரவேற்புரையாற்றினார்.



இந்த நிகழ்வில், தலைமை விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். இதேபோல் முதன்மை கல்வி அதிகாரி சாய்கீதா கௌரவ விருந்தினராக பங்கேற்று உரையை வழங்கினார்.



மேலும் இந்த நிகழ்வில் மேற்கு கோயம்புத்தூரின் ரோட்டரி கிளப் தலைமை அதிகாரி RTN ஜம்பு குமார், Nurture Nature Camp-ன் திட்ட தலைவர் உமா கே ராவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...