கோவையில் டாடா நிறுவனம் சார்பில் மின்சார வாகனங்களுக்கான பவர் சார்ஜிங் மையங்கள் அமைக்க ஒப்பந்தம்!

கோவை மாநகராட்சியில் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் POWER FAST CHARGING STATION அமைக்க கோவை மாநகராட்சி மற்றும் டாடா பவர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ செய்யும் நிலையங்கள்‌ அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகியுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக‌ கூட்டரங்கில்‌ கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ டாடா பவர்‌ நிறுவனம் இணைந்து கோவை மாநகரில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது, மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் மற்றும் டாடா பவர்‌ நிறுவன விற்பனை தலைவா்‌ வீரேந்திர கோயல்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சியில்‌ பெருகி வரும்‌ மின்சார வாகனங்களால்‌ சுற்றுச்சூழலுக்கும்‌, பொதுமக்களுக்கும்‌ பல நன்மைகள்‌ ஏற்படுகிறது. இதனை மேலும்‌ அதிகரிக்கும்‌ நோக்கத்தோடு கோவை மாநகராட்சியில்‌ 20 இடங்களில்‌ சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைப்பது அவசியமாகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு மற்றும்‌ தமிழ்நாடு அரசின்‌ வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நார்வாகம்‌ மற்றும்‌ டாடா பவர்‌ நிறுவனம் மும்பை ஒருங்கிணைந்து சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைக்க திட்டமிட்டுள்ளது.

சார்ஜிங்‌ நிலையங்களில்‌ TATA POWER EZ CHARGE Application வழியாக சார்ஜிங்‌ நிலையங்களை கண்டறிதல்‌, மின்சார வாகனங்களுக்கு சார்ஜ்‌ செய்தல்‌, அதற்கான கட்டணங்களை செலுத்துதல்‌ உள்ளிட்டவை TATA POWER EZ CHARGE Application வழியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வாகனத்திற்கு 60 நிமிடத்தில்‌ 80% வரை சார்ஜிங்‌ செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில்‌ கீழ்கண்ட 20 இடங்களில்‌ சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ 4 இடங்கள்‌, அவினாசி சாலை வ.உ.சி. பூங்கா பகுதியில்‌ 2 இடங்கள்‌, வாலாங்குளம்‌ பகுதியில்‌ 2 இடங்கள்‌, பெரியகுளம்‌ பகுதியில்‌ 1 இடம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ 3 இடங்கள்‌,

சரவணம்பட்டியில்‌ 1 இடம்‌, புரூக்‌ பீல்ட்ஸ்‌ அருகே மாநகராட்சி வானக நிறுத்துமிடம்‌ 1, சிங்காநல்லாரில்‌ 1 இடம்‌, அவினாசி சாலை டைடல்‌ பாரக்‌ அருகே 1 இடம்‌, காந்திபுரம்‌ கிராஸ்கட்‌ சாலை அருகே 1 இடம்‌, காளப்பட்டி சாலையில்‌ 2 இடங்கள்‌, துடியலாரில்‌ 1 இடம்‌ ஆகிய 20 இடங்கள்‌ ஆகும்‌.

இந்நிகழ்வில்‌ டாடா பவர்‌ நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர்‌ அர்விந்த்‌ சுப்பிரமணியன்‌, டாடா பவர்‌ கம்பெனி லிட்‌, சேனல்‌ பார்ட்னர்‌ தமிழ்நாடு கோகுல கண்ணன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...