48 மணிநேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்..! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்

திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

திமுக.,வினரின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக.,வினர் குறித்து அவதூறு தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அண்ணாமலை சட்டப்படி எதிர்கொள்ள தயார் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் விடுத்துள்ளார். அதில், தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...