வால்பாறையில் தேசிய மனித உரிமைகள் மன்றம் சார்பில் கருத்தரங்கு கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய மனித உரிமைகள் மன்ற மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமையில், மாநில அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய மனித உரிமைகள் மன்றத்தின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.



வால்பாறை வட்டார தலைவர் குமார் வரவேற்றார், நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.



தேசிய மனித உரிமைகள் மன்றத்தின் தலைவர் கிரிஷ் குமார் கூறுகையில், மலைப்பகுதியில் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை கண்டறிந்து நியாயமான பிரச்சனைகளுக்கான குரல் கொடுக்க வேண்டும். சேவை மனப்பான்மையோடு உதவி செய்யும் நோக்கத்தோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும்.



பொள்ளாச்சியை தனிமாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலியை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்று பேசினார். மேலும் கேரளா இடுக்கி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் என்ற ஒற்றை யானையை கேரளா அரசு அப்பகுதியிலிருந்து பிடித்து பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு விட விடும்படி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த யானையை பரம்பிக்குளம் வனப்பகுதியில் விட்டால் வனப்பகுதிக்குள் வாழும் பழங்குடியின கிராமங்களில் வாழும் மக்களையும், மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதிகளிலும் வாழும் மக்களையும், அச்சுறுத்தும் என்று அந்த யானையை பரம்பிக்குளம் வனப்பகுதிக்குள் விட வேண்டாம் என்று தமிழக அரசிடம் தெரிவிக்கும்படி வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வத்திடம் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவை தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவோம் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...