பல்லடம் பிரத்தியங்கரா தேவி கோயிலில் யாகக் குண்டம் - கூடைகூடையாய் வர மிளகாயைக் கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள உக்ர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நிகுபல யாக குண்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் கூடை கூடையாக வரமிளகாய்களைக் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோவில் மற்றும் உக்கிர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நிகுபல யாக பூஜை நடைபெற்றது.



இந்த யாகத்தில் காய்ந்த மிளகாய், பலகாரங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை பக்தர்கள் சீர்வரிசையாக கொண்டு வந்து, கூடை கூடையாக யாக குண்டத்தில் கொட்டி வழிபாடு செய்தனர்.



இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களிடம் இருந்து, தீய சக்திகள், பில்லி -சூனியங்கள் விலகும் எனவும், தொழில் வளர்ச்சி, குழந்தையின்மை, திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய், காய்கறிகள் ஆகியவற்றை பிரத்தியங்கிரா தேவிக்கு படைத்து, பின்னர் யாக குண்டத்தில் கொட்டினர்.



பொள்ளாச்சி, நல்லூர், சோமனூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த யாகபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...