பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டு சந்தையில் இன்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனையானது. இதனால், வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை மாட்டுச்சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. இந்த சந்தையானது வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகள் என 2 நாட்கள் நடைபெறுகிறது.



செவ்வாய்க்கிழமைகளில் மாடு விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.



இந்த சந்தையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வரும். மேலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் ஒரு கோடி மட்டுமே வர்த்தகம் நடைபெற்று வந்தது.



தற்போது வருகிற 22-ந் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தை களைகட்டி காணப்பட்டது.

வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டுவரப்பட்டிருந்தது.



அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர்.



இதனால் காலை முதலே சந்தை களைகட்டி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இன்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்குமேல் மாடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...