என்.ஐ.ஏ சட்டம் ஜிஹாதிகளுக்கு எதிரானது, இஸ்லாமியர்களுக்கு அல்ல..! - பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தகவல்

கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என திமுகவினர் பொய்யாக பரப்பி வருவதாகவும், ஊழல்வாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வந்தவர் தான் பாஜக தலைவர் அண்ணாமலை எனவும் கூறினார்.


கோவை: பாஜக கொண்டு வந்த என்.ஐ.ஏ சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



இஸ்லாமியர், கிறிஸ்தவ, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துடன் இந்தியாவில் உள்ளனர். தமிழகத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பொய்யாக பரப்பப்பட்டு வருகிறது. ஊழல்வாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வந்தவர் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

காங்கிரசும், திமுகவும் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர். என்.ஐ.ஏ முஸ்லிம்களை அல்ல ஜிஹாதிகளை கைது செய்கிறது. என்.ஐ.ஏ., ஜிஹாதிகளுக்கு எதிரானது.

கர்நாடகத்தில் குஜராத்தில் இருந்தது போல முன்னேற்றம் உண்டாகும் என்பதால் மிகப்பெரிய வெற்றியை பாஜக அடையும். கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் பாஜக நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களை பெறும். குறைந்த விலையில், வசதியாக புனித யாத்திரை செல்லும் வகையில் ஹஜ் கமிட்டியின் புதிய கொள்கை உள்ளது, என்றார்.

இவரை தொடர்ந்து, பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி பேசியதாவது,

தமிழகத்தில் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் தங்களுக்கான தேவையை, பிரச்னைகளை விண்ணப்பங்களாக கொடுத்து வருகின்றனர். பாஜகவிற்கு சிறுபான்மையினர் இடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளை நடைபெற உள்ள இப்தார் விருந்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்

உத்தரபிரதேசத்தில் நடந்த அக்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொலை வழக்கு சம்மந்தமாக தமிழகத்தில் தவறாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான உண்மை தகவலை இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...