கோவை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம்

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், துடியலூர் காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமிக்கப்பட்டார்.


கோவை: துடியலூர் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், சேரன் நகர், ஐ.டி.ஐ. இடையர்பாளையம், ஜி.என்.மில்ஸ், வெள்ளக்கிணர், துடியலூர், விஸ்வநாதபுரம், என்.ஜி.ஜி.ஓ.காலனி, அப்பநாயக்கன்பாளையம், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளை காவல் எல்லையாகக் கொண்டு துடியலூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ரத்தினகுமார் துடியலூர் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று துடியலூர் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் ரத்தினகுமார் அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இரத்தினக்குமர் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் தெற்கில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...