வால்பாறையில் முத்துமாரியம்மன் கோவில் 36 ஆம் ஆண்டு திருவிழா - கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்!

வால்பாறை அடுத்த அண்ணாநகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 36ஆம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அண்ணா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ மகா முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 36 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த திருவிழாவானது ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 20ஆம் தேதியான இன்று காலை 5:30 மணி அளவில் மங்கள வாத்தியம் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



தொடர்ந்து 8 மணி அளவில் ராமர் கோவிலில் இருந்து ஊர் பொதுமக்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர், 11:30 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது.



மதியம் 12:30 மணியளவில் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் மாபெரும் அறுசுவை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் நகர் மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், 10 வது வார்டு கவுன்சிலர் காமாட்சி, கோனார் ஜுவல்லரி வள்ளிக்கண்ணு, கிருஷ்ணா ஜுவல்லரி சிங்காரம், மருத்துவர் முனியசாமி, திமுக நகரச் செயலாளர் சுதாகர்,



நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், 4 வது வார்டு உறுப்பினர் பாஸ்கர் எம்ஜிஆர் தேயிலை தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது மற்றும் பெரியோர்கள் அன்னதானத்தை துவங்கி வைத்தனர்.



இந்த நிலையில், திமுக நகரச் செயலாளர் சுதாகர் மற்றும் 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழி கடை கணேசன் ஆகியோர் அண்ணா நகர் பகுதியில் பிரதான சாலையில் இருந்து கோவில் வரை ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு சாலை அமைத்து தருவதாக கோயில் வளாகத்தில் உறுதி அளித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...