கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.


கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ இன்று தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

கோவை கோட்டைமேடு சங்கமேஷ்வரர் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். மேலும் இந்த வழக்கில் கோவை மாநகர போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை கடந்த ஆண்டு அக் 27 ல் என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) க்கு மாற்றப்பட்டது. இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் கோவை மாநகரில் பொதுமக்கள் கூடும் ரயில்நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை சென்னை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின், முகமது தல்ஹா, பைரோஷ், முகமது ரியாஷ், நவாஷ், அஷ்ரப் கான் ஆகியோர் மீது என்.ஐ.ஏ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...