கோவையில் மூன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு அலுவலகங்களில் ஆவணங்கள், கணக்குப் பதிவுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகாரா? அல்லது ஆவணங்கள் சரிபார்ப்பு சோதனையா? என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த திடீர் சோதனையால் பத்திர பதிவு அலுவலங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சுப முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதனால் , சுபமூர்த்த நாளான இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகிறதா, விதிமுறைகளை மீறி பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. லஞ்சப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




கோவை மாவட்டத்தை பொறுத்தவரைதொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு பகுதிகளில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.




தொண்டாமுத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் DSP, Inspector உள்ளிட்ட ஆறு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, அலுவலக ஆவணங்கள், கணக்குப் பதிவேடுகள் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான விவரங்கள் விரிவாக சரிபார்க்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






அதேபோல, சரவணம்பட்டி காவல் நிலையச் சாலையில் அமைந்துள்ள காந்திபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் மற்றும் ரெட்பீல்டு பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரிவான சோதனையில் ஈடுபட்டனர்.




மூன்று அலுவலகங்களிலும் பல மணி நேரங்களாக சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோவையில் முக்கியபத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த திடீர் சோதனையால்

பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சோதனை குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...