கோவையில் மூன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு அலுவலகங்களில் ஆவணங்கள், கணக்குப் பதிவுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகாரா? அல்லது ஆவணங்கள் சரிபார்ப்பு சோதனையா? என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த திடீர் சோதனையால் பத்திர பதிவு அலுவலங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சுப முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதனால் , சுபமூர்த்த நாளான இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகிறதா, விதிமுறைகளை மீறி பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. லஞ்சப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




கோவை மாவட்டத்தை பொறுத்தவரைதொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு பகுதிகளில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.




தொண்டாமுத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் DSP, Inspector உள்ளிட்ட ஆறு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, அலுவலக ஆவணங்கள், கணக்குப் பதிவேடுகள் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான விவரங்கள் விரிவாக சரிபார்க்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






அதேபோல, சரவணம்பட்டி காவல் நிலையச் சாலையில் அமைந்துள்ள காந்திபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் மற்றும் ரெட்பீல்டு பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரிவான சோதனையில் ஈடுபட்டனர்.




மூன்று அலுவலகங்களிலும் பல மணி நேரங்களாக சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோவையில் முக்கியபத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த திடீர் சோதனையால்

பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சோதனை குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

Newsletter

கோவையில் மூன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் தொண்ட...

காரமடை அருகே பேப்பர் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கோவை காரமடை அருகே 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இத...

கோவையில் வட்டிப் பணத்தை வசூலிக்க சென்ற பைனான்சியர் கொலை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் அபுதாகிர் பாஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கே...

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...