ஜவுளி உற்பத்தியில் அதிகரிக்கும் செயற்கை நூலிழை பயன்பாடு - பருத்திக்கான மவுசு குறைவதாக தொழில்துறையினர் வருத்தம்

ஜவுளி உற்பத்தியில் பருத்திக்கு மாற்றாக செயற்கை நூல் இழை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் அடையாளமான பருத்தி ஜவுளித்தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதல்ல என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு இயங்கும் இந்திய ஜவுளித்தொழில் அதன் விலை மற்றும் சந்தையில் நிலவும் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் நிலைமையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய தொழில்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் விலை குறைந்த ஆடைகளை தயாரிக்க ரீடெய்ல் நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அறிவுரை வழங்கிவருகின்றன.

இதனால், ஜவுளி உற்பத்தியில் தற்போது பருத்திக்கு மாற்றாக செயற்கைஇழை பயன்பாடு அதிகரித்துள்ளது.



இது குறித்து இந்திய ஜவுளித்தொழில்முனைவோர் கூட்டமைப்பின்(ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், பருத்தி விலை அதிகரித்துள்ளதால் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு ஆடை ரகங்களை தயாரிக்க செயற்கைஇழைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பணவீக்கத்தால் சில்லரை விற்பனை பாதிக்கப்படுகிறது.

இதனால் விலை குறைந்த பிராண்டட் ஆடைகளை தயாரிக்க ரீடெய்ல் நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களை அறிவுறுத்தி வருகின்றன. விளையாட்டுதுறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆடைகள் தயாரிப்பிலும் ‘பாலியெஸ்டர் பிலெமென்ட்’ பயன்படுத்தப்படுகிறது. இந்த காரணங்களால் பருத்தி பயன்பாடு நூற்பாலைகளில் குறைந்து வருகிறது, என்றார்.



இதேபால், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம்(சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன், பருத்தி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பனியன் விலை ரூ.55 மட்டுமே. சந்தையில் ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளம்பர கட்டணம் உள்ளிட்டவையே இதற்கு காரணம். பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்படும்போது தயாரிப்பு விலை ரூ.45-ஆகவும் விற்பனை விலை ரூ.240-ஆக இருக்கும்.

பத்து ரூபாய் மட்டுமே வித்தியாசம் இருக்கும். இந்தியாவின் அடையாளம் பருத்தி. சில கார்ப்ரேட் நிறுவனங்கள் செயற்கைஇழை இறக்குமதி செய்து வினியோகிக்கின்றன. அவர்கள் லாபம் பெறுவதற்காக ரீடெய்ல் நிறுவனங்களை குறைந்த விலை ஆடைகளை தயாரிக்க அறிவுறுத்துகின்றன. இது பருத்தி ஜவுளித்தொழில் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதல்ல, என்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...